திண்டுக்கல் பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரமலான் விழா கொண்டாட்டப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரி செயலர் அருட்சகோதரி ஜோசப் செலின் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் சிறுமலர் முன்னிலை வகித்தார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நாட்டாண்மை Dr.Ln. N.M.B.காஜாமைதீன் கலந்து கொண்டு ரமலான் நோன்பின் மாண்புகளைக் குறித்து சிறப்புரையாற்றி கல்லூரி மாணவிகளுக்கு ரமலான் நோன்பு கஞ்சியை வழங்கினார். இவ்விழாவில் பேராசிரியர்கள் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.



