தூத்துக்குடியில் துறைமுகங்களுக்கான கபடி போட்டியில் சென்னை துறை முகஅணிக்கு வெற்றி கோப்பை :-
தூத்துக்குடியில் துறைமுகங்களுக்கான கபடி போட்டியில் சென்னை துறை முக அணிக்கு வெற்றி கோப்பை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக வளாகத்தில் அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான 40ஆவது கபடி போட்டி கடந்த 19ஆம் தேதி அன்று சுங்கத்துறை ஆணையர் விகாஸ் நாயர் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் தூத்துக்குடி வஉசி துறைமுகம், மும்பை துறைமுகம், ஜவா்ஹா்லால் நேரு துறைமுகம், பாரதீப் துறைமுகம், நியூ மங்களூா் துறைமுகம், தீனதயாள் துறைமுகம், சென்னை துறைமுகம், விசாகப்பட்டினம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.
லீக் போட்டிகள் 19, 20 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடைபெற்றன. இதில், பிரிவு 1-ல் சென்னை துறைமுகம், பாரதீப் துறைமுகம் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. பிரிவு 2-ல் தூத்துக்குடி வஉசி துறைமுகம், மும்பை துறைமுகம் அணிகள் தகுதி பெற்றன.
21-ம் தேதி நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சென்னை அணி 53-27 என்ற புள்ளிகள் கணக்கில் தூத்துக்குடி அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணி 51-45 என்ற புள்ளிகள் கணக்கில் பாரதீப் அணியை வென்றது.
இறுதி போட்டியில் சென்னை அணி 47-41 என்ற புள்ளிகள் மும்பை அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. தூத்துக்குடி அணி 3ஆவது இடத்தையும், பாரதீப் அணி 4ஆவது இடத்தையும் பெற்றன. வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணைய தலைவா் சுசாந்த குமாா் புரோகித், அவரின் மனைவி ஷெபாலி புரோகித் ஆகியோா் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்கள் கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் துறைமுக அலுவலா்கள், ஊழியா்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்கள்



