தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ கால பைரவர் திருக்கோவிலில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நெய் தீபம், எலுமிச்சை பழ தீபம், தேங்காய் தீபம் ஷாம்பூசணிக்காய் தீபம் ஆகியவை ஏற்றி ஸ்ரீ காலபைரவரை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பிறகு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.



