மதுரை மார்ச் 20,
மதுரை திருப்பரங்குன்ற சுப்பிரமணியசுவாமி திருத்தேரோட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கடந்த 5 ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனித் திருவிழா தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் பங்குனி திருநாள் 13 ஆம் நாள் காலை கற்பக விநாயகர் சின்னத் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டம் வைர தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருளி கிரிவலம் வந்து மாலை பி டி ஆர் மண்டபணி சிறப்பாக அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று மூன்று வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழாவின் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்ட திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி அன்னதானம் வழங்கினார். உடன் கோவில் ஸ்தானிக்கப்பட்டர் , அறங்காவலர் சண்முகசுந்தரம் மற்றும் கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் கிரிவலப் பாதையில் வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



