நாகர்கோவில் மேற்கு பகுதியில் மாநகர பாஜக சார்பில் பட்டகசாலியன்விளை பகுதியில் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.மாநிலத் தலைவர் அண்ணாமலை, அறிவுறுத்தலின்படி, மாவட்டத் தலைவர் கோபகுமார் வழிகாட்டலின்படி மும்மொழி கொள்கை ஆதரித்து நாகர்கோவில் மேற்கு மாநகர பகுதியில் நேற்று காலை மேற்கு மாநகர தலைவர் தலைமையில் மாநில செயலாளர் மீனாதேவ் மாவட்ட துணைத் தலைவர் தேவ் முன்னிலையில் ராகவன்,அகிலன், பாலசுப்பிரமணியன் ,மதன்,இஜிந்தன் மற்றும் தாமரை சொந்தங்கள் கலந்துகொண்டு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பட்டகசாலியன் பகுதியில் அனைத்து பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியினர் ஆர்வமுடன் கலந்து கொண்டு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.



