வேலூர் 02
அகில இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.டி.பழனி பங்கேற்று சிறப்புரை!!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, தாராபடவேடு, காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம், ஸ்ரீ நாராயணா திருமண மண்டபத்தில், புதிய பாரதம் அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்கம் சார்பில் ஓய்வூதியதாரர்கள் சங்க துவக்க விழா, ஓய்வூதிய அரசாணைகள் மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கும் நல திட்ட விழா உழைப்பாளிகளின் பாதுகாவலன் நிறுவனரும் மாநிலத் தலைவருமான டி.வேல்முருகன் தலைமையிலும், மாநில துணைச் செயலாளர் சி சிவானந்தம் முன்னிலையிலும், மாநில பொருளாளர் பி. சீதா வரவேற்புரையாற்றுகையில் குத்துவிளக்கேற்றி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் விழா தொடங்கியது. மாநில செயலாளர் கயல்விழி, மாநிலத் துணைத் தலைவர் முருகன், மாநிலத் துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, மாநிலத் துணைச் செயலாளர் திலகம் வாழ்த்துரை வழங்கி விழாவை சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரும், தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா தொழிலாளர் நல வாரிய உறுப்பினருமான தொழிலதிபர் ஆர்.டி.பழனி மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



