சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோயில் முன்பாக நெகிழி இல்லா சங்கரன் கோவில் நெகிழி பயன்பாடு தவிர்ப்பு விழிப்புணர்வு
சங்கரன்கோவில் நகர்மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் உத்தரவின்படி, சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கைலாச சுந்தரம் ஆகியோர் வழிகாட்டுதலின் படி ,
நெகிழி இல்லா சங்கரன் கோவில் மற்றும் நெகிழி பயன்பாட்டை குறைக்கும் விதமாக பள்ளிகள், மற்றும் தெருக்களில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது .
மேலும் வார்டு 23, சங்கரன்கோவில் கோவில் வாசல் சுற்றியுள்ள இடங்களில் பிளாஸ்டிக்கில் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டது.. இந்நிகழ்வில் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் மற்றும் நகராட்சி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்..