ஊட்டி. பிப் 21.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கான திறன் வளர்த்தல் மற்றும்
பயிற்சி முகாம் கட்டபெட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, கக்குச்சி மகாத்மா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் குன்னூர் அருகே உள்ள கரன்சிஎஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் காமன், முருகன்மற்றும் திருமதி பிர்ஜின் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே ஜே ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். அவர் தமது உரையின் போது கூறிய கருத்துக்களாவன –
மனித மூளை ஒரு அற்புதமான சூப்பர் கம்ப்யூட்டர்.நம்மில் பெரும்பாலோர்மூளையின் ஒரு சிறு பகுதியைத்தான் பயன்படுத்துகிறோம். மனித மூளையில் ஒரு கோடி செல்களும் பத்தாயிரம் கோடி நியூரான்களும் செயல்படுகின்றன. ஒவ்வொரு நியூரானும் ஆயிரம் முதல் பத்தாயிரம் நியூரான்களுடன் தொடர்பில் உள்ளது. அவற்றின் வழியாக மின்சாரம் பாய்கிறது. மேலும் அங்கு செயல்படும் வேதிப்பொருட்கள் தான் நமது உணர்வுகளை நிர்ணயிக்கிறது. அறிவியல் பூர்வமாக மூளையை பயன்படுத்தும் முறைகளை அறிந்து கொண்டால் நாம் சிறந்த அறிவாளிகளாக மாறலாம். உதாரணத்திற்கு 15 க்கும் மேற்பட்ட வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ள அவற்றை ஒரு கதை மூலம் இணைத்துக் கொண்டாள் இரண்டு வினாடிகளில் அவற்றை மனப்பாடம் செய்யலாம். அதுபோல பெரிய சொற்றொடர்களை அவற்றின் முதல் எழுத்தின் மூலம் ஒரு சிறு வார்த்தையாக்கி எளிதாக மனதில் பதிய வைத்துக் கொள்ளலாம். செல்போன் எண்களை நினைவில் கொள்ள அந்த எண்களை ஒரு வரைபடம் மூலம் நினைவில் வைத்துக் கொண்டால் எத்தனை எண்களை வேண்டுமானாலும் மனதில் பதிய வைத்துக் கொள்ளலாம். மனித மூளையின் ஒரு மாதிரி தான் நவீன ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகும். நமது மூளையின் முழு செயல்பாடுகளையும் ஒரு இயந்திரம் எளிதாக கற்றுக்கொள்கிறது. கை கால்களை இயக்க முடியாத மாற்று திறனாளிகள் தங்கள் கண் இமைகளின் அசைவின் மூலம் ஒரு கம்ப்யூட்டரை இயக்கலாம். செயற்கை கை அல்லது கால் பொருத்தப்பட்டவர்கள் அவற்றை இயக்க நினைக்கும் போது நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தானாகவே இயங்குகிறது. நவீன இயங்கும் எம்ஆர்ஐ ஸ்கேன் நாம் மனதில் நினைப்பது எல்லாம் எழுத்து வடிவில் கொடுக்கும் திறன் பெற்றுள்ளது. நமது மூளையில் சிலிக்கான் சிப்ஸ்களை பதிப்பதன் மூலம் மனிதர்களின் சிந்திக்கும் ஆற்றலை கட்டுப்படுத்தலாம் அல்லது அதிகரிக்கலாம். மூளையின் முழு திறனையும் பயன்படுத்த அடிப்படையில் கம்ப்யூட்டர் அறிவு மிக முக்கியம். ஒவ்வொரு மாணவரும் கம்ப்யூட்டரை திறம்பட இயக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை ஆசிரியர் ராஜு கூறினார். முன்னதாக தாளாளர் வெற்றிவேல், ஆசிரியர்கள் மணிகுண்டன், சுந்தரராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.