ஊட்டி. பிப்.17.
தற்போது போதை பொருள் சீரழிவு கலாச்சாரம் மேலோங்கி வருவதை காண முடிகிறது. கல்லூரி மாணவ மாணவியர் முதல் பல தரப்பினரும் போதையின் வளைக்குள் சிக்கி சீரழிந்து வருகின்றனர். போதைப்பொருள் பயன்பாட்டால் குற்ற செயல்களும் அதிகமாகி வருவதை காண முடிகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி போதைப்பொருள் ஒழிப்பில் தனி கவனம் செலுத்தி வருவதோடு துரித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சார பணிகளையும் தமிழக காவல்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. போதையின் பாதையில் இருந்து மீண்டெழ மாணவ சமூகத்திற்கு அரசு புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதனை அனைத்து தரப்பு மாணவர்களும் பதிவிறக்கம் செய்து கொண்டு விழிப்படையுமாறு நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வேண்டுகோள் விடுத்துள்ளார். “DRUG FREE” என்ற செயலியை 11. 01. 25 முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியர் தொடங்கி வைக்கப்பட்டுள்ளார் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புகார் தெரிவிக்க DRUG FREE TN.செயலி மூலம் போதைப் பொருட்கள், கஞ்சா, மருந்துகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குட்கா, பான் மசாலா, கள்ள சாராயம் போன்றவற்றின் பயன்பாடு மற்றும் இருப்பு குறித்து பாதுகாப்பாக புகார் செய்யலாம். புகாரின் நிலையை செயலியின் உணர் திறனாக கண்காணிக்கலாம். புகார் செய்பவரின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக வைக்கப்படும். புகாரை பாதுகாப்பாக அனுப்பவும் புகார் அனுப்பிய பிறகு என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க முடியும் உடனடி நடவடிக்கை உங்கள் புகார் மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு http://admin.drugfree-com என்ற இணையதளம் வழியாக உடனடியாக அனுப்பப்படும் விரைவான நடவடிக்கை மாவட்ட நோடல் அதிகாரியால் சம்பந்தப்பட்ட உள்ளூர் காவல் நிலையங்களுக்கு புகார் அனுப்பி வைக்கப்படும்.
போதை பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடைய உங்கள் பங்களிப்பை தரவும் இந்த செயலியை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து தங்கள் பகுதிகளில் போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பான விவரங்களை புகார் செய்யலாம். நீலகிரி மாவட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த செயலி மூலம் உடனடியாக தெரிவிக்கப்படும் புகார்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.