ஊட்டி. பிப். 14.
உலக குவாண்டம் தொழிற்நுட்ப ஆண்டாக அறிவித்துள்ள நிலையில் கோத்தகிரி
தூனேறி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி பார்வதி அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே ஜே ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது
ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டினை உலக குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆண்டாக அறிவித்துள்ளது. குவாண்டம் இயற்பியல் கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பூமி மற்றும் உள்ள கோள்கள் சூரியனை சுற்றி வருவது அதேபோல பேரண்டங்கள் அனைத்திலும் உள்ள ஈர்ப்பு விசைகள் செயல்படும் விதம் கிளாசிக்கல் இயற்பியல் என்று கூறப்படுகிறது. இதனை நியூட்டன் விதிகள் விளக்குகின்றன. ஆனால் ஒரு அணுவிற்குள் உள்ள அணு துகள்கள் நியூட்டனின் இந்த இயற்பியல் விதிக்கு கட்டுப்படுவதில்லை. அவைகள் வேறு இயற்பியல் விதியில் இயங்குகின்றன. இதனைத் தான் குவாண்டம் இயற்பியல் என்று கூறுவார்கள். இந்தக் குவாண்டம் இயற்பியலின் அடிப்படையில் தான் இன்றைய நவீன அறிவியல் துறைகளான செயற்கை நுண்ணறிவு குவாண்டம் கம்ப்யூட்டர் போன்ற பல தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இந்த ஆண்டினை இந்த அறிவிப்பின் மூலம் ஒரு புதிய அறிவியல் யுகம் தொடங்குகிறது என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட மருந்துகள் கண்டுபிடித்தல், காலநிலை மாற்றத்தை துல்லியமாக கணக்கிடுதல் போன்ற பல செயல்பாடுகள் நடைபெறவுள்ளன. இன்றைய கம்ப்யூட்டர்கள் 2000 வருடம் எடுத்துக் கொள்ளும் ஒரு கணக்கீடு குவாண்டம் கம்ப்யூட்டர் அசுர வேகத்தில் சில வினாடிகள் செய்து முடிக்கிறது. தற்போது கூகுள் நிறுவனம் வைத்துள்ள குவாண்டம் கம்ப்யூட்டர் உலகில் உள்ள 146 நாடுகளின் அரசுகளையும் பெரிய கம்பெனிகளையும் தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது. உங்கள் நிறுவனத்தின் செயல் தலைவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை என்பது குறிப்பிடத்தக்கது. குவாண்டம் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சைபர் கிரைம்கள் முற்றிலும் ஒழிக்கப்படும். மருத்துவத்துறையில் நாம் இதுவரை சிந்தித்துப் பார்க்காத பல அதிசயங்கள் இந்த தொழில்நுட்பம் மூலம் நிகழவிருக்கின்றன. வருங்காலத்தை ஆளப்போகும் இந்த தொழில்நுட்பத்தை பற்றிய தகவல்களை அறிந்து மாணவர்கள் தங்கள் வருங்காலத்தை திட்டமிட வேண்டும் என்பன போன்ற பல செய்திகளை ஆசிரியர் ராஜு அவர்கள் கூறினார். முன்னதாக ஆசிரியை சாந்தி அனைவரையும் வரவேற்றார்.