சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழப்பிடாவூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இந்த பள்ளி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலக செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு தலைமை ஆசிரியர் இரண்டு ஆசிரியர்கள் என மொத்தம் மூன்று பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு படிக்கும் பள்ளி மாணவர்களை கணித ஆசிரியர் ரவிக்குமார் கடந்த சில மாதங்களுக்கு
மாணவர்களை அடித்து ரத்தக்காயத்தை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தலைமையாசிரியர் சொர்னகாந்தி என்பவர் வட்டார கல்வி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதுவரை
எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்பொழுது காயம் பட்ட மாணவனின் ரத்த காயத்துடன் கூடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இங்கு பணியாற்றும் இரண்டாம் நிலை இடைநிலை ஆசிரியர் ரவிக்குமார் மற்றும் உமா ஆகியோர் சேர்ந்து கொண்டு ஜாதி ரீதியாக
தலைமையாசிரியரை துன்புறுத்துவதாகவும் .கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் அடிக்கடி வேறு இடத்திற்கு இடமாறுதல் பெற்றுக் கொண்டு செல்கின்றனர்.
குறிப்பாக இந்தப் பள்ளியில் 15 வருடங்களுக்கு மேலாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தும் இடைநிலை ஆசிரியர்களை மாற்றம் செய்யாதது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து முறையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.