சுசீந்திரம் ஜன 25
மேலராமன்புதூர் அருகே உள்ள சைமன்நகர் ஜெபகோபுர தெருவை சேர்ந்தவர் சேவியர் பிரைட் வயது 60. இவர் கொத்தனார் கையாள் வேலை செய்து வந்தார். தினமும் காலை 8 மணிக்கு ராமன்புதூர் கலுங்கடியில் நிற்பதாகவும். அங்கு வேலைக்கு ஆட்கள் அழைத்தால் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வருவதாகவும். இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து வேலைக்கு சென்றவர். ராமன்புதூர் கலுங்கடியில் நிற்கும்போது கிருஷ்ணன் என்ற கொத்தனார் அவரை வேலைக்கு அழைத்துக் கொண்டு சுசீந்திரம் அருகே உள்ள ஆஸ்ராமத்தில் உள்ள செந்தில் என்பவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது. மாலை 5 மணியளவில் திடீரென மயங்கி கீழே விழுந்தவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சேவியர் பிரைட் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி ஹெலன்அனிதா சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி சப்-இன்ஸ்பெக்டர் அனுஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


