களியக்காவிளை, ஜன-21
குமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 2022-ம் ஆண்டு மாணவர் ஷாரோன்ராஜை, அவரது காதலி கிரீஷ்மா கசாயத்தில் விஷம் கலந்து கொன்றார். இந்த வழக்கு நெய்யாற்றின் கரை அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது.
இந்த வழக்கில் காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த காதலி கிரிஷ்மா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, 20-ம் தேதி கிரிஸ்மாவுக்கு மரண தண்டனை வழங்கியது. மேலும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. தாய் மாமா நிர்மலகுமாருக்கு 3 ஆண்டு தண்டனையும் ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்தது.
இதற்கிடையில் கடந்த 18-ம் தேதி தனக்கு 24 வயது ஆனதால் மேலும் படிக்க வேண்டும் எனவும், எனவே மிக குறைந்த தண்டனை வழங்க கிரிஷ்மா நீதிமன்றத்தில் கதறினார்.
ஆனால் நீதிபதி தனது தீர்ப்பில் மரண படுக்கையிலும் ஷாரோன் கிரிஷ்மாவை உயிருக்குயிராக நேசித்தார் எனவும், கிரிஷ்மா அன்புக்கு துரோகம் இழைத்தார் எனவும், கிரிஷ்மா வயதை காரணம் காட்டி கருணை காட்ட முடியாது எனவும் கொல்லப்பட்ட ஷாரோனும் அதே வயதுடையவர் என நீதிபதி தீர்ப்பில் கூறினார்.
தீர்ப்பு வழங்கியவுடன் ஷாரோன் ராஜ் தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். கடவுள் எங்களை கைவிடவில்லை எங்கள் வேண்டுதலை கேட்டார் என தாயார் கதறி அழுத சம்பவம் கோர்ட் வளாகத்தில் நின்றஅனைவரையும் கண்கலங்க வைத்தது. நீதி வழங்கிய நீதிபதிக்கு நன்றி என பத்திரிகையாளர்களிடம் ஷாரோன் தாயார் கதறினார்.