பரமக்குடி,மே.:15: பரமக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் மோர் பந்தல் பந்தல் திறக்கும் விழா நடைபெற்றது
பரமக்குடியில் பரமக்குடி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் நீர்,மோர் பந்தல் திறக்கும் விழா நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் நீர்,மோர் பந்தலை திறந்து வைத்து ,பொதுமக்களுக்கு நுங்கு, தர்பூசணி,இளநீர், மோர், சர்பத் உள்ளிட்டவைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் கருப்பையா,போகலூர் ஒன்றிய துணைத் தலைவர் பூமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார் ,கிருஷ்ணமூர்த்தி, சக்தி, பொதுக்குழு உறுப்பினர் அருளானந்த், நகர் துணைச் செயலாளர்கள் மும்மூர்த்தி ,மோகனா, நகர்மன்ற உறுப்பினர்கள் கனிமொழி துரைமுருகன், ராதா,பிரபா ,தனலெட்சுமி,சுகன்யா,கிருஷ்ணவேணி, ஒன்றிய கவுன்சிலர் நதியா மனோகரன்,உதயநிதி நற்பணி மன்ற ஒன்றிய பொறுப்பாளர் துரைமுருகன், லண்டன் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.