அருமனை, ஜன- 22
அருமனை அருகே வெள்ளாங்கோடு பகுதி ஆற்றுப்பாலம் அருகே குடிநீர் இணைப்பு வசதிகளுக்காக கேபிள்கள் போடப்பட்டு உள்ளன. சம்பவ தினம் இந்த கேபிள்களில் இருந்து ரூபாய் 85 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் வயர்களை மர்ம நபர் திருடி சென்று விட்டார். இது குறித்து வெள்ளாங்கோடு ஊராட்சி அலுவலர் யசோதா அருமனை போலீசில் புகார் அளித்தார்.
புகார் என் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கேபிள் காப்பர் ஒயர்களைத் திருடியவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை சந்தேகத்தின் பேரில் மூவற்று கோணம் பகுதி சேர்ந்த செல்லத்துரை (52) என்பவரை பிடித்து விசாரித்தனர். இவர் லோடுமேனாக வேலை பார்த்து வருவதும், காப்பர் வயர்களை திருடியதும் தெரிய வந்தது. செல்லத்துரை திருடிய காப்பர் வயர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர். அவரை கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.