கருங்கல், ஜன- 20
கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட தூத்தூர், ரவிபுத்தன் துறை பகுதியை சேர்ந்த கிருஷ்ணம்மா, அனுஜா, ஹெலன் செல்வி, லதா, மேல்கிரீடா, விஜயகுமாரி ஆகிய ஆறு குடும்பத்தினரும் கடந்த 12 – 5 – 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான கடல் சீற்றத்தால் வீடுகளை நிலங்களையும் உடைமைகளையும் முழுவதுமாக இழந்தனர். இந்த ஆறு குடும்பங்களையும் மாவட்ட நிர்வாகம் கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் உள்ள இயற்கை பேரிடர் பல்நோக்கு பாதுகாப்பு மையக் கட்டத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக தங்க வைத்துள்ளனர்.
இவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், கிள்ளியூர் எம்எல்ஏ -வுமான ராஜேஷ்குமார் மாவட்ட கலெக்டரிடம் மனுக்கள் வழங்கி இருந்தார். இதன் அடிப்படையில் தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் ஆறு குடும்பத்தினருக்கும் தூத்தூர் பகுதியில் உடனடியாக அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசு தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என ராஜேஷ்குமார் எம் எல் ஏ கூறினார்


