ஜன:18
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் அறிவெளி நகர் பகுதியில் இரண்டு இடங்களில் அதிமுக மற்றும் பல் சமய நட்புறவு கழகம் இணைந்து பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் சோட்டோபாய் தலைமை தாங்கினார்.
பல் சமய நட்புறவு கழகத்தின் தலைவர் ஷாஜகான் அதிமுக கொடியை ஏற்றி வைத்து பிறந்தநாள் வாழ்த்துரை ஆற்றினார்.
தொடர்ந்து மாவட்ட கழக பேச்சாளர் ஆர் கே பாண்டியன் எம்ஜிஆரை வாழ்த்தி பேசினார் மாவட்டச் செயலாளர் ஹக்கீம் மாவட்ட பொருளாளர் செல்வகுமார் மாவட்ட இளைஞரணி தலைவர் உசேன் மாநகர துணைத் தலைவர் பாபு , நூர் முகமது, பல்லடம் ஒன்றிய தலைவர் முஹம்மது அலி துணைத் தலைவர் மீரான் திருப்பூர் ஒன்றிய தலைவர் சந்திரன் அதிமுகவை சார்ந்த ஒன்றிய அவை தலைவர் பாலதண்டபாணி ஒண்ணாவது வார்டு கிளைச் செயலாளர் பார்த்திபன் ஒன்றிய மகளிர் அணி கிளைச் செயலாளர் மஹபுபீ மகளிர் அணி துணைச் செயலாளர் அன்னபூரணி4. வார்டு செயலாளர் அருள்குமார் மற்றும் அப்பகுதியைச் சார்ந்த அதிமுக தொண்டர்களும் பல் சமய நட்புறவுக் கழகத்தின் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.