சென்னை, ஜன- 7, சென்னை தென் மேற்கு மாவட்டம் தி.நகர் கிழக்கு பகுதி 141 அ வட்டம் சார்பில் தி.நகர் தக்கர்பாபா வளாகம் வினோபா ஹாலில் ஏன் வேண்டும் திமுக ? என்ற என்ற தலைப்பில் விளக்க உரையும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தலைமை கழக பேச்சாளர் சிவாஜி இராமதாஸ் சிறப்புரை ஆற்றினார் .
வட்டச் செயலாளார் லட்சுமிகாந்தன் ஏற்பாட்டில் நடைபெற்ற
இந்நிகழ்வில் சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளரும் மயிலை சட்ட மன்றஉறுப்பினருமான மயிலை த.வேலு, தி.நகர் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ. கருணாநிதி, தி. நகர் மேற்கு பகுதிச் செயலாளர் கே. ஏழுமலை, 141 வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜா அன்பழகன், சென்னை தென்மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மோனிஷா கருணாநிதி, செயற்குழு உறுப்பினர் கோ .சு. மணி மற்றும் மாவட்ட, பகுதி , வட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட மகளிரணி, பிற அணியினர் கலந்து கொண்டனர்.