By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளத்தில் சிக்கிய ஏழு பேர் பாதுகாப்பாக மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > வெள்ளத்தில் சிக்கிய ஏழு பேர் பாதுகாப்பாக மீட்பு
அரியலூர்மாவட்டம்

வெள்ளத்தில் சிக்கிய ஏழு பேர் பாதுகாப்பாக மீட்பு

Last updated: December 14, 2024 11:43 am
December 14, 2024 34 Views
Share
SHARE

அரியலூர்,டிச;14


அரியலூர் மாவட்டம், பெரியதிருக்கோணம் கிராமத்தில் உள்ள மருதையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய ஏழு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (50) தனது குடும்பத்தினருடன், அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் கிராமத்தில் தங்கியுள்ளார். இவர் பெரிய திருக்கோணம் கிராமத்தின் அருகே ஓடும் மருதையாற்றின் கரையோரங்கள் மற்றும் ஆற்றின் நடுவே உள்ள கருவேல மரங்களை வெட்டி, காயவைத்து, அதனை கரியாக்கி வியாபாரம் செய்து வருகிறார். இப்பணிகளுக்காக செல்வராஜ், தனது குடும்பத்தினர் மஞ்சுளா (41), கோபால்(28), ஐஸ்வர்யா (24), ஆகாஷ்(2), சுகன் (10), மற்றும் எட்டு மாத கைக்குழந்தை ஆகியோருடன் மருதையாற்றின் கரையோரம் குடிசை அமைத்து மரக்கரியை உருவாக்கம் பணிகளை செய்து வந்தார். 


இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்த கன மழையின் காரணமாகவும், பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாகவும், பச்சை மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் மருதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளத்தின் நடுவே செல்வராஜ் குடும்பத்தினர் சிக்கிக் கொண்டனர். இவர்கள் மருதையாற்று வெள்ளத்திற்குள் சிக்கித் தவிப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. 


இதனையடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர். தீயணைப்புத் துறையினர் வெள்ளத்தைக் கடந்து சென்று, செல்வராஜ் குடும்பத்தினரை மீட்டு, பாதுகாப்பாக அழைத்து கரைக்கு கொண்டு வந்தனர். குழந்தைகளை முதலில் அலுமினிய கொப்பரையில் அமர வைத்து பாதுகாப்பாக அழைத்து வந்தனர். பின்னர் பெரியவர்கள் கயிறு கட்டி பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர். மேலும், மீட்கப்பட்ட ஏழு பேருக்கும் உடனடியாக உணவு வழங்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர், வருவாய் துறையினர் மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞர்கள்,  ஊராட்சி மன்றத்தலைவர் ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்                 பொ.இரத்தினசாமி பாராட்டுகளைத் தெரிவித்தார்.


இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

You Might Also Like

சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியின் போது உயிரிழந்த காவலர்

நாகர்கோவிலில் தனியார் நிறுவன பெண் ஊழியர் மாயம்

சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவருக்கு லைக் கொடுத்தால் சிக்கல் உண்டாகும்; மாணவிகளுக்கு எஸ்.பி. அறிவுரை

தமிழ்க்கனவு திட்டம் வெற்றியடைவதற்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்; விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மூணாறு விபத்தில் இறந்த மாணவர்களுக்கு நிவாரணம் – வேண்டுகோள்

February 21, 2025 24 Views
மாவட்ட அளவிலானவில்வித்தை போட்டி
பி. அக்ரகாரம் முனியப்பன் கோவில் திருவிழா
அஇஅதிமுக கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
கிள்ளியூர் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?