திண்டுக்கல்லில் டோஸ்ட் மாஸ்டர் சங்கத்தின் துவக்க விழா நிகழ்ச்சி திண்டுக்கல்
விவேரா கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு டோஸ்ட் மாஸ்டர் சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் தலைவர் மோகன கிருஷ்ணன் DTM, பார்த்தசாரதி DTM மற்றும் Dr.அஸ்வதி ராஜன், DTM ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்கள்.
மேலும் அரிமா சங்கத்தின் கவர்னர் Dr.சசிகுமார், பி.என்.ஐ. நிறுவனத்தின் திண்டுக்கல் மண்டல செயல் இயக்குனர் ஜெகன் பழனிச்சாமி மற்றும் ரோட்டரி கவர்னர்
ஆர்.பி.சுப்பிரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை வாழ்த்துரை ஆற்றினார்கள்.
மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக ஆங்கில மேடை பேச்சுத்திறன் மற்றும் தலைமை பண்புகளை வளர்ப்பதற்கும் ஒரு தக்க அமைப்பு உருவாகி உள்ளது என அனைத்து தரப்பினரும், பொதுமக்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சியில் சங்க பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
இதில் சங்கத்தின் தலைவராக Dr.ஜெயசீலன் பதவி ஏற்றுக் கொண்டு ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் அனைத்து உறுப்பினர்களும் அறிமுகப்படுத்தப்பட்டு அவர்களுக்கான பட்டய சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் நிகழ்வில் வட்டார இயக்குனர் பிரியங், பகுதி இயக்குனர் நவீன் குமார், வழி நடத்துனர் விவேகானந்தன் மற்றும் டாக்டர் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் டோஸ்ட் மாஸ்டர் சங்கத்தின் தலைவர் Dr.ஜெயசீலன், மகேஷ், பாண்டி மணிகண்டன், பாண்டியன், ஆனந்த் குமார், பார்கவி, விவேக், அம்சா, யுவசாரதா மற்றும் பிற உறுப்பினர்களும் சேர்ந்து சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் செயலாளர் சரயு நன்றியுரை ஆற்றினார்.