மதுரை மே 7
தமிழகத்தில் நடைபெற்ற + 2 பொதுத் தேர்வில் சிஇஓ பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். S.சுவாதி 595 மதிப்பெண்கள் பெற்று
முதலிடமும் G.பார்வத வர்தினி 591 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும்
K.திரிஷா 590 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
இதனை கொண்டாடும் வகையில் பள்ளி வளாகத்தில் சேர்மன் ராஜா கிளைமாக்ஸ் வைஸ் சேர்மன் சாமி ஆகியோர் மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து வகுப்பு ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தனர்.
இந்த நிகழ்வின் போது பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மாணவிகள் பெற்றோர்கள் உடனிருந்தனர்.



