தஞ்சாவூர். நவ.17.
தஞ்சாவூர் ரோகிணி மருத்துவ மனையும் ஏன்சியன்ட் சிட்டி அரிமா சங்கமும் இணைந்து உலக சர்க்கரை நோய் தினத்தை யொட்டி இலவச மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
ரோகினி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் நிவேதன் சர்க்கரை நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.டாக்டர் மோகன் தாஸ் சக்கர நோயினால் சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினார்.
இதில் அரிமா சங்க மண்டல தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட தலைவர் ரோஸ்விக்ராயன், ரோகிணி மருத்துவமனை நிர்வாகப் பொறியாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.