தக்கலை நவ 3
இந்தியப் பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை சார்பில் குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த 68ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு 68 தமிழ்த்திருவிழா என்ற தலைப்பில் விருது வழங்குதல் மற்றும் நூல் வெளியீட்டு விழா தக்கலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சாமிதோப்பு தலைமைபதி தலைமை குரு மகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில், முதற்சங்கு ஆசிரியர் சிவனி சதீஷ் முன்னிலையில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம். பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தியாகி பொன்னப்பநாடார் சிறப்பு மலர் முதற்சங்கு இலக்கிய இதழை வெளியீட பாலபிரஜாபதி அடிகளார் பெற்று கொண்டார். அதனை தொடர்ந்து தங்கமணி எழுதிய தலைமுறை தள்ளாட்டங்கள், மற்றும் பாமில பேகம் எழுதிய தூரிகையின் தூறல்கள் என்ற கவிதை நூலை வெளியிட்டு எழுத்தாளர்களுக்கு விருதுகள் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
பின்னர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருபவர்களுக்கு தமிழ்நாடு சாதனையாளர் 2024 என்ற விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார், பால்டிசைலஸ் மற்றும் முன்னாள் ஓமான் தொலை தொடர்பு தலைமை பொறியாளர் அப்துல் ஸமது, லயன் ஒய். எஸ். லெனின், என். சுரேஷ் பிரகாஷ், டாக்டர் எஸ்.எ.சஜீஷ் கிருஷ்ணா, சஜித் சுவாமிஜி, வழக்கறிஞர் பார்த்தசாரதி, சமூக சேவகர் தக்கலை சந்திரன், களரி யோக ஆசிரியர் ராஜாசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் பாரம்பரிய கலையான சிலம்பம், மற்றும் யோக நிகழ்வுகள் மாணவர்கள் நடத்தி காட்டினர்.



