நாகர்கோவில் – அக்- 23
கன்னியாகுமரி மாவட்டம் எட்டாமடை அழகிய பாண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த வசந்தா என்ற பெண் நேற்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடம் தனது மகள் கொலை மருமகன் மர்ம சாவு குறித்து மறுவி விசாரணை நடத்த வேண்டி ஒரு புகார் மனு அளித்தார் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது.
நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன் இந்நிலையில் எனது மகள் லலிதா பாய் ( 37 ) தடிக்காரன்கோணம் சி. எம் . எஸ் . பகுதியில் அவளது வீட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி அதிகாலை 5:25 மணி அளவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். இந்தக் கொலை யாரால் செய்யப்பட்டது என்று இந்நாள் வரை காவல்துறையினால் கண்டுபிடிக்க முடியவில்லை காரணம் கொலை செய்த நபர் பண வசதி படைத்தவர் தற்போது தடிக்காரன் கோணம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வைத்து வரும் பிராங்க்ளின் முதல் எதிரியாகவும் பக்கத்து வீட்டு தாஸ் அவரது மனைவி விஜி மற்றும் மரிய ராஜன் அவரது மனைவி எலிசா துணையுடன் ஜெஸ்டின் மணிகண்டன் ஆகியோர் திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளனர். இந்த உண்மையை மறைப்பதற்காக பிராங்க்ளின் காவல்துறை அதிகாரிகளை பணம் கொடுத்து சரி செய்து இந்த கொலை வழக்கில் இருந்து தப்பித்துள்ளார் மேலும் இந்த வழக்கில் மணிகண்டன் மற்றும் ஜெஸ்டினை கைது செய்து அடுத்த நாள் போலீசார் வெளியில் விட்டு விட்டனர் . இந்த வழக்கில் குற்றவாளி என முயற்சி செய்யப்பட்டவர்கள் எப்படி அடுத்த நாள் வெளியில் விடப்பட்டனர்.மேலும் கொலையாளி பிராங்க்ளின் டீக்கடையில் சிசிடிவி கேமரா 5 .1 . 2018 அன்று மட்டும் மாற்றப்பட்டு இதுவரை இயங்கி வருகிறது . அந்த ஆதாரம் எங்கே ? கொலை நடந்த போது மோப்ப நாய் டீக்கடைக்கு சென்றுள்ளது இதை மறைத்தது ஏன் ? கொலை செய்த அன்பு எலிசா நேரில் பார்த்த பிறகும் காவல் அதிகாரிகளிடம் கூறியும் வெளியே சொல்லாமல் மறைப்பது ஏன் ? மணிகண்டன் ஜெஸ்டின் பிராங்க்ளின் கொலை நடப்பதற்கு முந்திய நாள் பக்கத்து வீட்டில் பார்ட்டி கொடுக்கப்பட்ட தடயங்கள் இருப்பதாக தாண்டிஸ்வரன் என்னும் போலீஸ்காரர் கூறின பின்பும் கண்டுபிடிக்காமல் அலட்சியப்படுத்துவது ஏன் ? தாஸ் மனைவி பைத்தியம் எனக் கூறுவதன் நோக்கம் ஏன்?தாஸ் கொலை நடந்த அன்று ஐந்து மணிக்கு வெளியே நின்று இருந்தார். மேலும் ஆறு மணிக்கு வெளியே வேலைக்காக போனதையும் எலிசா பார்த்தால் அந்த ஆதாரம் எங்கே போனது ? தாஸ் மகள் தனியா கூறிய ஆதாரங்கள் எங்கே ? நாளை காலை வெளியே சத்தம் கேட்கும் என்று தாஸ் கொலை நடந்த முன் தினம் இரவு சொல்லி இருந்ததாக தனியா கூறிய வாக்குமூலம் எங்கே ? ராஜன் டீக்கடையில் சம்பவம் நடந்த முந்தின நாள் கேமரா மாற்றப்பட்டதன் நோக்கம் என்ன ? இந்நிலையில் தற்போது இந்த வழக்கு பூதப்பாண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆர்சிஎஸ் 10/ 2024 என்ற எண்ணில் வழக்கு நடைபெறுகிறது . ஆனால் இன்று வரை குற்றவாளிகள் யாரையும் குற்றவாளியாக சேர்க்கவில்லை. போலீஸ் தரப்பில் வழக்கை முடித்து வைக்க முற்படுகிறது. கடந்த ஏழு வருடம் பல மனுக்கள் அளித்தோம் ஆனாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏனென்று கூட தெரியவில்லை . இந்த ஆதாரங்களை வைத்து கொலையாளியை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கவும் தனது மருமகன் மர்மச் சாவுக்கு உண்மையான காரணத்தை கண்டுபிடித்து தரும்படியும் வசந்தா அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.