மதுரை மே 3,
மதுரை திருப்பரங்குன்றத்தில் மே13 ல் வசந்த உற்சவ திருவிழா தொடக்கம். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்சவ திருவிழா மே 13ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டுடன் தொடங்குகிறது. தொடக்க நாளான அன்று உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜை முடித்து காப்பு கட்டப்படும். இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தின் மையப்பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மேடையில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இந்த நிகழ்ச்சி மே 21வரை நடக்கும். விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு மே 22 அதிகாலை 5 மணிக்கு சண்முகர், வள்ளி, தெlய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து காலை 7:00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுள்வர். அன்றைய தினம் திருப்பரங்குன்றம், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு வரும் பால்குடங்களில் இருக்கும் பால் சுவாமிக்கு மதியம் பால்குடங்களில் இருக்கும் பால் சுவாமிக்கு மதியம் 2 மணி வரை அபிஷேகம் செய்யப்படும். மே 23 காலையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மொட்டையரசில் எழுந்தருளி அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் கோயிலுக்கு முருகப் பெருமான் திரும்புவார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் மே13 ல் வசந்த உற்சவ திருவிழா தொடக்கம்.

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics