குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தூய்மை பணி
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நேற்றைய தினம் 02/10/2024 கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி மற்றும் இதர நீதிபதிகள், நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், மாணவ மாணவிகள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.