ஈரோடு செப் 16
ஈரோடு நஞ்சனாபுரத்தில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) செயல்படுகிறது. இந்த கல்லூரியில் கேட்டரிங் சயின்ஸ் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை சார்பில் மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது .
இந்த பயிற்சி பட்டறைக்கு கல்லூரி தாளாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வாசுதேவன் வரவேற்றார்.
இதில் கோவை ஐடிசி வெல்கம் குரூப் ஓட்டலின் செப் தீபக் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை துறை தலைவர் கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். .இந்த பயிற்சியை பட்டறையில் கேட்டரிங் துறையை சார்ந்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பயன்பட்டனர்.