தூத்துக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு கனிமொழி எம்.பி மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
தியாகி இம்மானுவேல் சேகரனின் 67வது நினைவு இன்று தமிழ் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்படுகிறது. தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் அலங்கரிக்கப்பட்ட இமானுவேல் சேகரன் நினைவு நாள் முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி., சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் , மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர் இதில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் , கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.