கம்பத்தில் 70-க்கும் மேற்பட்டவிநாயகர் சிலை திருமேனி ஊர்வலம் நடைபெற்றது.
இந்து முன்னணியினர் பங்கேற்பு.
கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் 70க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.அதனைத் தொடர்ந்து இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் ஊர்வலத்தை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். உமாராணி வினோத் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ,ஆர்.எஸ். ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சசிகுமார், பிஜேபி மாவட்ட துணை தலைவர் ஜெயராமன்,இந்து முன்னணி பிரமுகர் அப்சரா முருகேசன்,மகளிர் அணி தலைவி முத்து மணி, மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு கம்பம் நகர முக்கிய வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினர், மின்சார வாரியத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்ட செய்தியாளர். அசோக் குமார்.