நாகர்கோவில் செப் 4
பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் நேற்றைய தினம் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் பிரமாண்ட முறையில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் 2024 நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்
மாநகர் பகுதியில் மாவட்ட சிறுபான்மை அணி பொது செயலாளர் ஜாக்சன் முன் நின்று நடத்த நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி நேசமணி நகர், சைமன் காலனி பகுதிகளில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். உடன் பாஜக நிர்வாகிகள் சிவசீலன், ஷீலாராஜன், சந்திரசேகர், தீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.