ராமநாதபுரம், செப்.4-
தமுமுகவின் சேவை தமிழகம் கடந்து வெளிநாடுகள் வரை தன்னலமின்றி சேவை செய்து வருவதில் ஒரு உதாரணம் இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் அவசர சிகிச்சைக்கு ரத்த தானம் வாங்கி உலக அளவில் பெருமிதம் சேர்த்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து அரேபிய நாடுகளுக்கு ஜாதி மதம் பாகுபாடு இன்றி வளரும் வருமானத்திற்காக வேலைக்கு செல்கின்றனர்.
அங்கு சிலர் உடல்நிலை குறைவு ஏற்படுகிறது. அவர்களுக்கு சிகிச்சை வழங்க மற்றும் தேவையான அத்தனை உதவிகளும் வழங்க தமிழகத்தில் இருந்து தமுமுக மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா முயற்சியில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
தமுமுக வெளிநாடு நிர்வாகிகள் மண்டல துணைச் செயலாளர் ஆசிக் இக்பால், சிங்கம்புணரி சாகுல், மருத்துவ அணி துணைச் செயலாளர் தேவகோட்டை நூர் முகம்மது , கலீல் ரகுமான் ஆகியோர் முயற்சியில்
ரியாத்தில் உள்ள தமிழர மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரைக் காப்பாற்ற உடனடியாக 10 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது.
அப்போது தமுமுகவின் இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் அமைப்பு நிர்வாகிகள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக ரத்தம் வழங்கி உயிரை காப்பாற்றி மிகப்பெரிய சேவை செய்துள்ளனர்.
ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தமுமுகவின் சேவை இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டுகளிலும் தொடர்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இதற்கு இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் மருத்துவ சேவை அணி மத்திய மண்டலம் ரியாத் சவுதி அரேபியா நிர்வாகிகள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.