செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் தனியார் மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு டீ பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பரிசுகளை வழங்கினார் உடன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் க.செல்வம் ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



