நாகர்கோவில் ஆகஸ்ட் 19
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சல் நிலையங்களில் தமிழ்நாடு தென் மண்டல அஞ்சல் துறை தலைவரால் ஒரு சிறப்பு அஞ்சல் தலை ரத்து செய்தல் வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு ரத்து செய்தல் அஞ்சல் தலை
அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் இவ்விரு தலைமை அஞ்சலகங்களில் கிடைக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் விவரம் வருமாறு :-
மலையாள நாட்காட்டியின்படி கொல்ல வர்ஷம் என்கின்ற புதிய நூற்றாண்டின் தொடக்கமாக (1199 ம் ஆண்டிலிருந்து 1200) ஆகஸ்ட் 17, 2024 அன்று (சிங்கம் 1, 1200) ஆகும்.
எனவே தென் மண்டல அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு அவர்களால் ஒரு சிறப்பு அஞ்சல் தலை ரத்து செய்தல் வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு ரத்துசெய்தல் கன்னியாகுமரி கோட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் தலைமை அஞ்சலகம் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகம் ஆகிய இரு இடங்களிலும் (17.08.2024) கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களில் நடைபெற்றது.
இந்த வெளியீட்டு நிகழ்வில் நாகர்கோவில் முதுநிலை அஞ்சலக அதிகாரி சுரேஷ், தக்கலை அஞ்சலக அதிகாரி குமார், அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் மற்றும் அஞ்சலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.