நாகர்கோவில் – ஆக் – 12,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன் கோவில் யாதவர் தெருவிலுள்ள ஆதிபராசக்தி சக்திபீட கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா நடைபெறுவது வழக்கம் . அதனை தொடர்ந்து இந்த வருடம் நேற்று ஆடிப்பூர விழாவையொட்டி 3208 செவ்வாடை அணிந்த பக்தர்கள் கஞ்சி கலசங்களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
அதிகாலையில் ஆதிபராசக்திக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . பின்னர் 108 மந்திரங்களுடன் சக்தி கவசம், சக்தி வழிபாடு நடைபெற்றது கூட்டு தியானம் சக்தி பீடத் தலைவர் சின்னத்தம்பி தலைமையில் நடைபெற்றது. பிறகு காலை அன்னதானம் வழங்கப்பட்டது இதனை சக்தி பீடத் துணைத் தலைவர் அருணாச்சலம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து சக்தி பீடத் தலைவர் சின்னத்தம்பி தலைமையில் கஞ்சி கலச ஊர்வலம் நடைபெற்றது . இதனை மேயர் மகேஷ் கொடியசைத்து துவங்கி வைத்தார் மேல தாளங்கள் முழங்க ஓம் சக்தி பராசக்தி என்ற மந்திர கோஷத்தை ஒலித்த வண்ணம் 3208 செவ்வாடை அணிந்த பக்தர்கள் பங்கேற்ற கஞ்சி கலச ஊர்வலம் ராஜா மண்டபத்தில் இருந்து தொடங்கி ஆதிபராசக்தி கோவிலை வந்தடைந்தது ஆதிபராசக்திக்கு கஞ்சி படைத்து முடித்ததும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை சக்தி பீடப் பொருளாளர் அசோக்குமார் வழங்கினார். அதன் பின்பு பக்தர்கள் இரண்டு மணிக்கு தங்களது கரத்தால் கருவறைக்கு சென்று பாலபிஷேகம் செய்தனர். இதனை மாநகராட்சி உறுப்பினரும் , அதிமுக வடக்கு மண்டல செயலாளரும் நாகர்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மகளுமான ஸ்ரீலிஜா தொடங்கி வைத்தார். பின்னர் மாலை 6 மணிக்கு ஆதிபராசக்திக்கு சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது. அதன் பின்பு 108 பேருக்கு சேலை மற்றும் வேஷ்டிகள் வழங்கப்பட்டது. இதனை சக்தி பீட தலைவர் சின்னதம்பி வழங்கினார்.
விழா ஏற்ப்பாடுகளை சக்தி பீட தலைவர் சின்னதம்பி, துணைத்தலைவர் அருணாசலம், சுப்பிரமணியன் , பால்ராஜ், செந்தில்குமார், ராமகிருஷ்ணன், செல்வரெத்தினம் உட்பட விழாக் குழுவினர் செய்திருந்தனர்.