பாங்க் ஆஃப் பரோடா வங்கி தனது 117 வது கிளை திறப்பு விழா
சென்னை மண்டலத்தின் பொது மேலாளர் மற்றும் மண்டலத் தலைவர் ஏ.சரவணகுமார் அரும்பாக்கத்தில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் 117 வது கிளையை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பாங்க் ஆஃப் பரோடா தனது 117 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்நாளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6 புதிய கிளைகளை தொடங்கி தனது சேவையை விரிவு படுத்துகிறது.
இந்த 6 கிளைகளில் ஒரு கிளை,
சென்னை மெட்ரோ பிராந்தியத்தின் துணைப் பொது மேலாளர் மற்றும் பிராந்திய தலைவர் நிர்மல் படேல், துணைப் பிராந்திய மேலாளர் ஏ.வி.வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கிளையை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த
புதிய கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் அரும்பாக்கம் கிளை மேலாளர் ஜெகதீஷ் வரவேற்று உபசரித்தார்.



