திருப்பூர் ஜூலை: 15
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம் காடையூர் ஸ்ரீகாடேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு!!
திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் அவர்களின் உத்தரவின் படி உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் மரு.பா.விஜயலலிதாம்பிகை அவர்களின் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆறுச்சாமி மற்றும் பாலமுருகன் கொண்ட குழுவினர் மேற்படி அன்னதானத்திற்கு உணவுதயாரிக்கும் இடம், மூலப்பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் இடம் மற்றும் உணவு வழங்கும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் உணவுப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலபொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும், முறையாக பாதுகாப்பாக சேமித்து வைத்து பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், தரமான காய்கறிகள் வாங்கி முறையாக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், குடிநீர் தரமானதாகவும் பாதுகாப்பான முறையின் சேமித்து வைத்து பயன்படுத்திட வேண்டியும், சுற்றுப்புற சுகாதாரம் பேணுதல், தயாரிப்பில் ஈடுபடக்கூடிய மற்றும் உணவுப்பொருள் கையாளும் நபர்கள் தன்சுத்தம் பேணுதல் மற்றும் பாதுகாப்பு அணிகலன்கள் அணிய வேண்டும் எனவும் அன்னதானக்குழுவினருக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. மேலும் அன்னதானத்திற்க்கு தயாரிக்கப்படும் உணவுகளின் உணவு மாதிரி கண்டிப்பாக எடுத்து வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.