தருமபுரி மாவட்ட யாதவ மகா சபை, மற்றும் மாவட்டஇளைஞரணி தலைமையில் ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்து கோன் அவர்களின் 314-வது ஜெயந்தி விழா தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சியில் உள்ள சில்லார அள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மா. தா. ஆறுமுகம் மாவட்ட தலைவர் தலைமையிலும், பி. பச்சியப்பன் ஊர் தலைவர் சில்லார அள்ளி அவர்களின் முன்னிலையிலும், மாவீரன் பட திறப்பாளர் 0.M.B.இ ராமதாஸ் மாநில பொதுச் செயலாளர்,சிறப்புரை ஆர்.ஆர். உதயகுமார் மாநில இளைஞரணி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.



