தர்மபுரிமாவட்ட இந்திய மருத்துவ சங்கம் சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.தர்மபுரி நான்கு ரோட்டில் இருந்து அதியமான் பேலஸ் வரை மனித சங்கிலி நடந்தது. கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியபடி கலந்து கொண்டனர்.தர்மபுரி மருத்துவக் கல்லூரி டீன் அமுதவல்லி,நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மருத்துவநலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி முன்னில வகித்தார். இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் இளங்கோ வரவேற்றார்.இந்திய மருத்துவ சங்க செயலாளர் சண்முகப்பிரியா, இந்திய மருத்துவ சங்க மாநில துணைத்தலைவர் டாக்டர் சந்திரசேகர்,மனநல மருத்துவர் கோகுல், டாக்டர் நடராஜன் மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



