திருப்பூர் ஜூன்:27 மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் தலைமையில் மற்றும் ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் முன்னிலையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் “நம்ம திருப்பூர்” என்ற புதிய செயலியை துவக்கி வைத்தார்கள். உடன் மண்டல தலைவர்கள் திருமதி வெ.உமா மகேஸ்வரி(மண்டலம்-1), தர.கோவிந்தராஜ்(மண்டலம்-2), சி.கோவிந்தசாமி(மண்டலம்-3), தலைமை பொறியாளர் திருமாவளவன், துணை மாநகர பொறியாளர் கண்ணன் உட்பட பலர் உள்ளனர்.



