சிவகங்கை, செப்.14:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்திற்கு உட்பட்ட புதுவயல் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், பெட்டிக்கடைகள், காய்கறி கடைகள் மற்றும் வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உணவு மற்றும் காய்கறி கழிவுகளை பச்சை நிற கூடையிலும், பிளாஸ்டிக், உலோகம் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை நீல நிற கூடையிலும், மருத்துவக் கழிவுகளை சிவப்பு நிற கூடையிலும், பெயிண்ட் டப்பாக்கள் மற்றும் மின்சாரக் கழிவுகளை கருப்பு நிற கூடையிலும் பிரித்து வழங்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் உமா மகேஸ்வரன் அறிவுறுத்தினார். மேலும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்குமாறும் வணிக நிறுவனங்களில் தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



