வேலூர், ஆக. 27:
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் காங்கேயநல்லூரில் அமைந்துள்ள திருமுருக கிருபானந்த வாரியார் ஞானத்திரு வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ். லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டார்.
கண்காட்சியில் தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் அரசின் சாதனைகள் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. கண்காட்சி ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்படும் தகவல்கள் குறித்து ஆட்சியர் பார்வையிட்டு கேட்டறிந்தார்.
நிகழ்வில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். கதிர் ஆனந்த், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், 1-வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப. பேச்சிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



