தருமபுரி, ஜூலை 24 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மேலும் சிறு, குறு விவசாயிகள் வங்கிகளில் வாங்கியுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் . பெரும் விவசாயிகள் வங்கிகளில் வாங்கி உள்ள கடன்களில் 50% தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் ஈச்சம்பாடி அணைக்கட்டு மற்றும் ஏரி, குளங்களை தூர்வாரி விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஆட்சியரிடம் வலியுறுத்தினார்கள்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர்/மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, பாலக்கோடு கூ ட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர்/ மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகாமை இயக்குனர் மதுமதி, வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி, வேளாண்மை துணை இயக்குனர் சித்ரா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



