கிருஷ்ணகிரி, ஜூலை 3 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு இருந்து ola இருசக்கர வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிக்கு தொழிற்சாலைக்கு சொகுசுப் பேருந்தில் செல்லும் பொழுது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்படும் பகுதியாக மாறி வருகிறது. மது விற்பனை நிலையம் சாலையின் அருகாமையிலேயே உள்ளதாகவும் 500 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்திருப்பதும் இதன் காரணமாக நோயாளிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அதிகம் இப்பகுதியில் பயன்படுத்தி வாகனங்கள் சென்று வருவதாலும் கடந்த ஒரு மாத காலத்தில் ஆறு விபத்துக்கள் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்திற்கு அரசு மதுபான கடையே முக்கிய காரணம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குற்றம் சாட்சி வருகின்றனர். அரசு 500 கிலோமீட்டர் 500 மீட்டருக்கு குறைவாக உள்ள மதுபான கடைகளையும் மருத்துவமனை அருகிலேயே உள்ள மதுபான கடைகளை அகற்றும் முயற்சியிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்பகுதி மட்டும் கைவிடப்பட்டது இவ்வூர் பகுதி மக்களிடையே பெரும் அதிப்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே வரும் காலங்களில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக செல்லவும் வாகன ஓட்டிகள் நிம்மதியுடன் சென்று வரவும் இம்மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



