மார்த்தாண்டம், ஜூன் 22 –
மேல்புறம் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெருமுனை கூட்டம் மேல்புறம் சந்திப்பில் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க மேல்புறம் தெற்கு ஒன்றிய தலைவர் சரவணவாஸ் நாராயணன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சுரேஷ் குமார், ஒன்றிய பொருளாளர் கங்காதரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைத் தலைவர் ராஜேஷ் வரவேற்றார்.
மாநில சமூக ஊடகப் பிரிவு செயலாளர் அருண்குமார், முன்னாள் ராணுவ பிரிவு மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ், கலை மற்றும் கலரச்சார பிரிவு மாவட்ட அமைப்பாளர் சுகுமாரன், ஊடக பிரிவு மாவட்ட அமைப்பாளர் அருள் குமார், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட அமைப்பாளர் சேகர், மாவட்ட செயலாளர் விஜு, மாலட்ட பிரிச்சார பிரிவு இணை அமைப்பாளர் சுஜித் பாபு, உள்ளிட்டோர் பேசினர்.
இந்த தெரு முனை கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஐயப்பன், லதா, ஒன்றிய துணைத் தலைவர் மோகன் தேவ், முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் வடிவேல்ராஜ் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஒன்றிய பொதுச்செயலாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார்.



