திருப்பூர், ஜூன் 9 –
திருப்பூர் மாநகரில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் 10.06.2026 ம் தேதி புதன்கிழமை காலை 6 மணி முதல், திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் முதல் பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தம் வரை தொடர்ந்து சுமார் 20 நாட்கள் பணிகள் நடைபெற உள்ளதால், அவிநாசியிலிருந்து திருப்பூர் நோக்கி வரும் வாகனங்களுக்கு கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
அவிநாசியிலிருந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையம், புஷ்பா ஜங்சன், ஊத்துக்குளி, பல்லடம், மங்கலம், காங்கேயம் மற்றும் தாராபுரம் செல்ல இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும், காவல் ஆணையர் அலுவலகம் வழியாக இடதுப்புறம் திரும்பி, 60 அடி ரோடு வழியாக, PN ரோட்டை அடைந்து, KVB ஜங்சன் வழியாக வலதுப்புறம் திரும்பி செல்ல வேண்டும்.
அவிநாசி ரோடு வழியாக வரும் வாகனங்கள் குமார் நகர் மற்றும் சாமுண்டிபுரம் செல்ல, காவல் ஆணையர் அலுவலகம் வழியாக இடதுப்புறம் திரும்பி, 60 அடி ரோடு வழியாக, PN. ரோட்டை அடைந்து, KVB ஜங்சன் வழியாக வலதுப்புறம் திரும்பி, மில்லர் சந்திப்புக்கு முன் உள்ள ராம் நகர் 3 வது வீதியின் வழியாக வலதுப்புறம் திரும்பி, பங்களா ஸ்டாப் சென்று, வலதுப்புறம் திரும்பி குமார் நகர் மற்றும் சாமுண்டிபுரம் செல்லலாம்.
அங்கேரிபாளையத்திலிருந்து வரும் வாகனங்கள், பழைய பேருந்து நிலையம், புஷ்பா ஜங்சன், ஊத்துக்குளி, பல்லடம், மங்கலம், காங்கேயம் மற்றும் தாராபுரம் செல்ல, காவல் ஆணையர் அலுவலகம் வழியாக இடதுப்புறம் திரும்பி, 60 அடி ரோடு வழியாக, PN. ரோட்டை அடைந்து, KVB ஜங்சன் வழியாக வலதுப்புறம் திரும்பி செல்ல வேண்டும்.
திருப்பூரில் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக கேட்டுகொள்ளப்படுகிறது.



