திருச்சி, ஜூன் 8 –
திருச்சி திருவெறும்பூர் அருகே அரியமங்கலம் பாரதியார் தெருவைச் சேர்ந்த பிரபல ரவுடி பாதுஷா (24) நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டூர் ஆயில் மில் செக் போஸ்ட் காமராஜர் நகர் வினோபாஜி தெரு பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பாதுஷாவின் கொடூர கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் எஸ்.பி. டோங்ரே பிரவின் உமேஷ் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறி தவெக நிர்வாகிகள் பிரசாந்த் மற்றும் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்கான பின்னணி, முன்விரோதம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.



