திருச்சி, ஏப்ரல் 28 –
திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணிபுரியும் செந்தாமரை கண்ணன் (56) என்பவர், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவில் பெண்கள் குறித்த அவதூறான ஆபாச வீடியோவை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, மாநகர கமிஷனர் காமினி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.



