ஈரோடு, ஏப். 20 –
ஈரோடு டெக்ஸ்வேலியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு “வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை” வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரசு இசை பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும் மற்றும் தேர்தல் தொடர்பான மேஜிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதையும் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரியா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, மாவட்ட ஊராட்சி செயலாளர் தனம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



