கோவை, மார்ச் 25 –
கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம் கணேசபுரம் பகுதியில் அதிமுக அம்மா பேரவை சார்பில் “மக்களைத் தேடி மாற்றம் வேண்டி” தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் அன்னூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஓ.எஸ்.சாய் செந்தில் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு பேச்சாளராக அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது செய்த திட்டங்களை சாதனைகளாக எடுத்துக் கூறியும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தி வெற்றிவாகை சூடுவோம் என பிரச்சார உரையாற்றினார்.
இந்நிகழ்வில் உடன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், மாநில வர்த்தக அணி துணை தலைவர் அம்பாள் பழனிச்சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட மாணவரணி செயலாளர் கோகுல் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.



