அரியலூர், ஜூன்:10
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி- IV (GROUP – IV) தேர்வு நடைபெறும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் விநாயக கல்வி நிறுவனத்தில் உள்ள தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று நேரில் பார்வையிட்டு தெரிவித்ததாவது:-
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-( IV) நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மட்டும் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம், ஆகிய 4 வட்டங்களிலும் 87 தேர்வு கூடங்களில் 24,745 தேர்வாளர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். அவற்றில் நேற்று தேர்வுக்கு வருகை புரிந்தவர்கள் 19,821, தேர்வு எழுத வருகை புரியாதவர்கள் 4860 நபர்கள், மேலும், அரியலூர் மாவட்டத்தில் இத்தேர்வின் கண்காணிப்பிற்காக துணை ஆட்சியர் நிலையில் 04 பறக்கும் படை அலுவலர்கள், 18 இயங்கு குழுக்கள் மற்றும் கண்காணிப்பாளர், உதவியாளர் நிலையில் தேர்வுக்கூட நடைமுறைகளை கண்காணித்திட 87 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் தேர்வு பாதுகாப்பு பணிக்கு காவலர் ஆயுதம் ஏந்திய காவலர்களும் மாவட்டம் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.